படகு சவாரி வசதி வேண்டும்

Update: 2022-07-29 11:03 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பிரசித்தி பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலாதளமான பூம்புகாரில் உள்ள பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. மேலும், பூங்காக்களில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சுற்றுலா வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பூங்காக்களை சீரமைத்து, பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரை படகு சவாரி செய்யும் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்