பன்றிகள் தொல்லை

Update: 2022-07-28 11:12 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், பன்றிகள் கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்