வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-13 17:02 GMT

ரெட்டியார்சத்திரத்தை அடுத்த புதுசத்திரம் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் ஏராளமான லாரிகளில் மண் ஏற்றி செல்லப்படுகிறது. இவை தார்பாய் கொண்டு மூடாமல் திறந்தநிலையில் கொண்டு செல்வதால் காற்றில் மண் பறக்கிறது. இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே லாரிகளில் தார்பாய் கொண்டு மண்ணை மூடி ஏற்றி செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்