கொசுக்கள் தொல்லை

Update: 2023-09-13 10:58 GMT

கோவை தாமஸ் வீதி மற்றும் தெலுங்கு வீதி சந்திப்பில் குப்பைகளை சேகரித்து, சாலையோரம் தொட்டிகளுடன் குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்