சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் பெண்களுக்கான பொதுக்கழிப்பறை இல்லை. இதனால் அப்பகுதி பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக சுகாதார சீர்கேடும் ஏற்படுவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் பொதுக்கழிப்பறை கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?