குரங்குகள் தொல்லை

Update: 2023-08-23 12:23 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழசாலை, அம்மா மண்டபம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச் சென்று விடுகின்றன. அப்போது அவற்றை துரத்த முயன்றால் பொதுமக்களை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்