பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்

Update: 2023-07-19 11:26 GMT

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே கட்டிபாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்று பகுதிகளை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. விளை நிலங்களை ஒட்டி இந்த பள்ளி கட்டிடம் இருப்பதால் பள்ளி கட்டிடத்திற்குள் விஷப்பூச்சிகள், பாம்புகள் அடிக்கடி வந்துவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்