ஊராட்சி சேவை மையம் திறக்கப்படுமா?

Update: 2023-07-12 11:49 GMT

கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் ரூ.13 லட்சத்தில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த சேவை மைய கட்டிடம் திறப்பு விழா செய்யப்பட்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ ,மாணவிகள், விவசாயிகள் பல்வேறு சான்றிதழ்களை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் திறக்கப்படாததால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் புன்னம் சத்திரம் பகுதிக்குச் சென்று அங்குள்ள சேவை மையத்தில் தங்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். எனவே புன்னம் ஊராட்சி நிர்வாகம் பசுபதிபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகள் ,பொதுமக்கள், மாணவ ,மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்