சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டி

Update: 2023-07-05 17:24 GMT

சிவகிரி பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட சாணார்பாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொட்டியின் தூண்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் கீழே சாய வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்