கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.