சுகாதார சீர்கேடு

Update: 2023-07-02 10:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் எருக்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் மூக்கை மூடிய படி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து கரும்புகை வீடுகளுக்குள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்