'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-06-25 13:43 GMT

வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் உள்ள வெள்ளோடு மின்சார வாரியம் அருகே குழி தோண்டப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழி தற்போது மூடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தினத்தந்தி சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்