பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையும் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் நீண்ட தொலைவில் உள்ள திட்டக்குடி அல்லது விருத்தாசலத்தில் இருந்து தான் தீயணைப்பு நிலையம் வர வேண்டி உள்ளது. இதன் காரணமாக தீ விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகிறது. இதை தடுக்க பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.