பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2023-06-04 10:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி பள்ளிவாசல் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தூக்கி செல்கின்றன. மரங்களில் ஏறி அட்டகாசம் செய்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்