தூர்வார வேண்டும்

Update: 2023-05-31 08:03 GMT

அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு பகவதிபுரத்தில் பாலசவுந்தரி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்தும், பாசிகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும்.

-நீலகிருஷ்ணன், வடக்கு பகவதிபுரம்.

மேலும் செய்திகள்