குழந்தைகளுக்கு ஆபத்து

Update: 2023-05-24 16:44 GMT

மொடக்குறிச்சி ஒன்றியம் விளக்கேத்தி ஊராட்சியில் 7-வது வார்டு புளியங்காட்டுத்தோட்டத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் கீழ் உபரி நீர் வெளியேற்றும் பகுதியில் மேல் இரும்பாலான மூடிபோட்டு மூடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மூடி தற்போது இல்லை. இதனால் அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகள் உபரிநீர் வெளியேறும் பகுதியில் விழுந்து பேராபத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உடனே உபரிநீர் வெளியேறும் பகுதியில் மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்