'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-05-17 14:52 GMT

பவானி-வெள்ளித்திருப்பூர் சாலையில் உள்ள பட்லூர் நால்ரோடு அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளம் மூடப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்