குரங்குகள் தொல்லை

Update: 2023-05-17 12:36 GMT
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். கலெக்டர் அலுவலகம் அருகில் ஏராளமான குரங்குகள் சுற்றுகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களில் இருக்கும் பைகளை கீழே எடுத்து வீசியும் பொருட்களை எடுத்தும் செல்கின்றன. மேலும் கலெக்டர் அலுவலகம் வரக்கூடிய பொதுமக்களை குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. எனவே இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்