கோவை ரேஸ்கோர்ஸ் ஏ.டி.டி. தெருவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள ராட்சத மரத்தின் பெரிய கிளை முறிந்து, கீழே விழாமல் சாய்ந்து தொங்கி கொண்டு இருக்கிறது. அந்த கிளை இன்னும் வெட்டி அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள். எந்த நேரத்தில் அந்த கிளை கீழே விழுமோ, அப்போது யாருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை உள்ளது. எனவே அந்த கிளையை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.