பக்தர்கள் அவதி

Update: 2023-05-07 12:24 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் 3-வது வார்டு கிழக்கு வாசல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு விளக்கு ஒன்று இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்கினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்