பன்றிகள் தொல்லை

Update: 2023-04-30 10:26 GMT

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை கிளறிவிடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுதொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம்செய்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்