தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-30 09:39 GMT

கிணத்துக்கடவு அருகே உள்ள செட்டியக்காபாளையம், தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், பனப்பட்டி, வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்