தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-04-26 13:14 GMT

திருச்சி உறையூர் நெசவாளர் காலனி மேற்கு 2-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இச்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக திறந்து கிடக்கிறது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த பாதாள சாக்கடையில் தவறி விழும்நிலை உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்கு மூடி அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்