பன்றிகள் அட்டகாசம்

Update: 2023-04-23 13:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் பன்றிகள் அதிகளவில் சுற்றிதிரிகின்றன. இவை சாக்கடைக்குள் உருண்டு, புரண்டு குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தோட்டம், விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்