திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?