நாய்கள் தொல்லை

Update: 2023-04-02 14:33 GMT

மயிலாடுதுறை பெரிய கண்ணாரதெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்