'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-04-02 14:08 GMT

சித்தோடு நடுப்பாளையம் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள பனங்காட்டு குட்டையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குட்டையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்