திட்டக்குடி மெயின் ரோடு கடை வீதியில் சாலையோரத்தில் உள்ள டெலிபோன் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் கம்பம் எந்நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் சாய்ந்த நிலையில் உள்ள டெலிபோன் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.