கடும் துர்நாற்றம்

Update: 2023-03-26 17:29 GMT

சித்தோடு நடுப்பாளையம் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள பனங்காட்டு குட்டையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த கழிவுகள் குட்டை பகுதிக்குள் தண்ணீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. உடனே பேரூராட்சி நிர்வாகம் குட்டையோரம் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்