மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலூகா ஆக்கூர் ,மடப்புரம் ஊராட்சி மன்ற பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். அதுமட்டுமின்றி விவசாயத்திற்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரங்களில் காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்