அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?

Update: 2023-03-22 12:46 GMT
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் கவுண்டன் புதூர் பிரிவு அருகே தார் சாலையின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதன் காரணமாக பாலம் பழுதடைந்தது .அதன் காரணமாக புதிய பாலம் கட்டுவதற்காக அருகில் மண்சாலை போடப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழி பறித்து பாலம் கட்டும் பகுதியில் முன்பகுதியில் எந்த ஒரு தடுப்புகளோ மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிப்பு பலகைகலோ வைக்கப்படவில்லை .இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்வதால் புதிதாக வருபவர்கள் இரவு நேரங்களில் வரும் போது நேராக சென்று பாலம் கட்டுவதற்கு பறிக்கப்பட்டுள்ள குழியில் விழுந்து உயிரிழக்கும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . வாகன ஓட்டிகள் ஒப்பந்ததாரர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறியும் ஒப்பந்ததாரர் எதையும் கண்டு கொள்ளவில்லை.எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பகுதியில் முன் பகுதியில் தடுப்புகள் அமைத்து அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்