குடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்

Update: 2022-07-21 05:53 GMT
சென்னை-கும்பகோணம் சாலையில் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வெளியூர் சென்று வருகின்றனர். அப்பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் போதுமான குடிநீர் வசதி இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க என்.எல்.சி. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்