கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2023-03-19 14:42 GMT

பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 11-வது வார்டு புது காடையாம்பட்டியில் உள்ள பெண்கள் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. இதன்காரணமாக பெண்கள் பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை விரைந்து செய்து உடனே பெண்கள் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்