தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-03-15 08:55 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில் இருந்த சாய்ந்த மின்கம்பத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். அதற்கு பிறகு அந்த சாலையில் உள்ள 3 மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு இருந்த தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்