அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 11:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சாநகரம் ஊராட்சியில் குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக அங்கன்வாடி மையம் தற்காலிகமாக வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்