குரங்குகள் தொல்லை

Update: 2023-03-05 11:03 GMT

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன்களை தூக்கி செல்கின்றன. மேலும், சாலையில் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்