நாய்கள் அட்டகாசம்

Update: 2023-03-05 11:03 GMT

மயிலாடுதுறை சேந்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடி அட்டகாசம் செய்து வருகின்றன . மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்