தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-02-26 11:47 GMT

திருச்சி மாம்பழச்சாலையையும், அண்ணாசிலையையும் இணைக்கும் காவிரி பாலம் சீரமைக்கப்பட்டு விரைவில் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் வரவுள்ளது. தற்போது சாலைப்பணி நடைபெற்று வரும் நிலையில் வாகனங்கள் செல்வதற்கு ஒருவழியும், வருவதற்கு ஒருவழியுமாக பாலத்தின் மையத்தில் நீண்ட தடுப்பு சுவர் அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பான போக்குவரத்தாகவும் அமையும் என்பது திருச்சி மாநகர மக்கள் அனைவரது விருப்பமாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்திட வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்