நீரோடை தூர்வாரப்படுமா?

Update: 2023-02-26 07:45 GMT

கோத்தகிரி அருகே உயிலட்டியில் இருந்து கூக்கல்தொரை வழியாக நீரோடை ஒன்று செல்கிறது. இந்த ஓடை நீரை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் ஓடையில் புதர் செடிகள் வளர்ந்துள்ளதால் மழை நேரத்தில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. எனவே கோடை காலம் நெருங்கியுள்ள வேளையில், ஓடையை முழுமையாக தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்