குரங்குகள் தொல்லை

Update: 2023-02-19 17:14 GMT
வேப்பூர் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவை திறந்திருக்கும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்பு காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்