மதுரை மாநகராட்சி தீர்த்தக்காடு வண்டியூர் 38-வது வார்டு பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
.