வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-02-19 14:16 GMT

கஸ்பாபேட்டை-மொடக்குறிச்சி சாலையில் பொட்டிநாயக்கன்வலசு அருகே உள்ள வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் காணப்படுகிறது. இதில் ஒருபுறம் உள்ள தடுப்புச்சுவர் ரோட்டையொட்டி காணப்படுகிறது. இதனால் ரோடு குறுகியதாக மாறி உள்ளதால் பஸ், லாரிகள், கன்டெய்னர் லாரிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடனே அந்த தடுப்புச்சுவரை இடித்துவிட்டு வாகனங்கள் செல்லும் வகையில் புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்