விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை

Update: 2023-02-15 17:52 GMT
திட்டக்குடி அடுத்த ஈ கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை பலத்த சேதமடைந்து காணப்படுவதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையில் உள்ள மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், வெயிலிலும், மழையிலும் நின்று பொதுமக்கள் பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடை கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்