திட்டக்குடி அருகே ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கட்டிடத்தில் நிற்க பயணிகள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?