கால்நடைகள் தொல்லை

Update: 2023-02-08 07:46 GMT

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை கடைகளுக்குள் புகுந்து காய்கறிகளை சேதம் செய்து வருவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளிலும் உலா வருகின்றன. இதனால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தெருக்களில் கால்நடைகளை திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் அதிக அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்