வெட்டப்பட்ட வேப்பமரங்கள்

Update: 2023-02-05 11:23 GMT

ஈரோடு வில்லரசம்பட்டி அருகே உள்ள செம்பாம்பாளையம் செல்வலட்சுமி நகரில் புதிய வீட்டு மனை குடியிருப்பு உள்ளது. பல குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள். குடியிருப்புக்கு செல்லும் நகராட்சிக்கு சொந்தமான பாதையில் இருந்த 8 வேப்பமரங்களை யாரோ வெட்டிவிட்டார்கள். கோடை காலம் தொடங்கிய இந்த நேரத்தில் நிழல் தந்த வேப்ப மரங்களை வெட்டியது அப்பகுதி மக்களை வேதனை அடையச்செய்துள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வேப்ப மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்