மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி செல்லூர் 60 அடி ரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கோவில்களில் திருவிழா சமயங்களில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்க கட்டிட வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிகளை காணமுடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கலையரங்கம் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.