மதுரை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி 33-வது வார்டு மானகிரியில் சுமார் 2500 நடுத்தர குடும்பத்தினர் உள்ளனர். இங்கு 5-ம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளி மட்டுமே உள்ளது.இதனால் உயர்கல்வி படிப்பதற்கு மாணவிகள் வெகுதொலைவு செல்ல வேண்டியுள்ளது.எனவே மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?