தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-11 13:15 GMT

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் சாலைகளில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்