நாய்கள் தொல்லை

Update: 2023-01-08 11:56 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பெரிய செங்குந்தர் தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்தி செல்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைவது தொடர்கதையாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்